மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
அகமதாபாத்தில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 7 ஓட்டங்களில் சேஸ் பந்துவீச்சில் lbw ஆனார். அணித்தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி சதம் விளாசினார். அவர் சொந்த மண்ணில் 8 ஆண்டுகள் 289 நாட்களுக்கு பிறகு இந்த சதத்தை பதிவு செய்துள்ளார்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 100 ஓட்டங்களுடனும், துருவ் ஜூரேல் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.