விளையாட்டு

சொந்த மண்ணில் 8 ஆண்டுகளுக்கு பின் சதமடித்த கே.எல்.ராகுல்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.

அகமதாபாத்தில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 7 ஓட்டங்களில் சேஸ் பந்துவீச்சில் lbw ஆனார். அணித்தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி சதம் விளாசினார். அவர் சொந்த மண்ணில் 8 ஆண்டுகள் 289 நாட்களுக்கு பிறகு இந்த சதத்தை பதிவு செய்துள்ளார்.

உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 100 ஓட்டங்களுடனும், துருவ் ஜூரேல் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…