151வது உலக தபால் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

இன்று (09) 151வது உலக தபால் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிகழ்வையொட்டி, இலங்கையில் 56வது தேசிய தபால் தின விழா இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

உலக தபால் ஒன்றியத்தின் முடிவின்படி, உலகெங்கிலும் உள்ள 193 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 09 அன்று உலக தபால் தினத்தைக் கொண்டாடுகின்றன. 

1874 ஆம் ஆண்டு அக்டோபர் 09 அன்று, பல நாடுகள் உலக தபால் ஒன்றியத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அதன் நினைவாக, 1969 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் உலக தபால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையில், தபால் ஊழியர்கள் மேலதிக நேர ஊதியத்தை மோசடியாகப் பெற்றதாக தபால் திணைக்களத் தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று தபால் தொழிற்சங்கங்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளன. 

இது தொடர்பாக இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது.

Exit mobile version