உலகம்

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய சீனா

பாகிஸ்தான் செயற்கைக்கோளை சீனா விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ளதொரு விண்வெளி ஏவுதளத்திலிருந்து பாகிஸ்தானின் ரிமோட் சென்சிங் (பிஆர்எஸ்எஸ்-2) செயற்கைக்கோள் மற்றும் சீனாவின் ஏர்சாட் 03, 04 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள், இன்று(19) ‘லிஜியான்1 ஒய்8’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

இதன்மூலம், சீனா மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 3-ஆவது பாகிஸ்தானிய செயற்கைக்கோளாக பிஆர்எஸ்எஸ்-2 மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், கடந்த ஜனவரியில் பாகிஸ்தானின் பிஆர்எஸ்சி-இ01 செயற்கைக்கோளும் அதனைத்தொடர்ந்து கடந்த ஜூலையில் பிஆர்எஸ்எஸ்-1 செயற்கைக்கோளும் சீனாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடன் விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…