இலங்கை

யாழ் நபரின் தலைவிதியை மாற்றிய கோர விபத்து ; சோகத்தில் குடும்பம்!

அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் யாழ்ப்பாணம் – சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தில் குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம்குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…