தலகொல்ல மரம் முறிவு – மாற்று வீதிகளை பயன்படுத்தவும்

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதியின் ஊடாக போக்குவரத்து தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளது. 

எனவே, அவ்வீதியைப் பயன்படுத்தாமல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அனைத்து சாரதிகளிடமும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version