உலகம்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவும் கிரீஸும் புதிய ஒப்பந்தம்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானியாவும் கிரீஸும் கையெழுத்திட்டுள்ளன.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான யெவெட் கூப்பர் (Yvette Cooper) மற்றும் கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் (George Gerapetritis) ஆகியோர் கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸ் நகரில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக கடத்தல் கும்பல்களை இரு நாடுகளும் சட்ட ரீதியாக கையாள முடியும் எனக் கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர், ஆங்கிலக் கால்வாயை கடக்க பயன்படுத்தப்படும் சிறுபடகுகள் விநியோகத்தை தடுக்க கிரீஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா உரிய பயிற்சியும் அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…