விளையாட்டு

மீண்டும் சென்னை அணியின் தலைவராக தோனி

ஐபிஎல் தொடரின் சென்னை அணியில் இருந்து ருதுராஜ் கேக்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார்.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மீண்டும் எம். எஸ் தோனி தலைவராக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் தலைவராக தோனி நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது.

இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதேபோல இந்தமுறையும் தோனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியாவுக்கு நிர்ணயித்த இலக்கு

ஆசிய கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…