இலங்கை

இஸ்ரேல் செல்ல தயாராகும் இலங்கையர்கள்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேலில் விவசாயத் தொழிற்துறையில் பணியாற்ற 95 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தொழிலுக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் 12 பேருக்கு நேற்றைய தினம் விமான பயணச் சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டது.

அவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி இஸ்ரேலுக்குச் செல்லவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…