155 பேர் பலி வீதிகளில் தொடரும் மரண ஓலம்!

இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அவற்றில் 147 பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 155 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

Exit mobile version