உலகம்

மத்திய கிழக்கு பதற்றம் – 16 கப்பல்களுக்கு தாக்குதல்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. 

போர் ஆரம்பமான பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளில் இதுவரை 16 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மோதலின் போது, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை குறித்து நான்கு அறிக்கைகள் வந்துள்ளன என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, ​ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு இந்திய எண்ணெய் கப்பல் ஒன்றுக்கு நேற்று ஈரான் அனுமதி வழங்கியிருந்தது. 

அதன்படி சவுதி அரேபியாவில் கொள்வனவு செய்த 135,335 மெற்றிக் தொன் எரிபொருளுடன் ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியாவை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…