முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு சத்திரசிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (19) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version