உலகம்

AI பொலிஸை களமிறக்கிய தாய்லாந்து!

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர மனிதன் பணியமர்த்தப்பட்டுள்ளது. இயந்திர மனிதனில் 360 டிகிரியிலும் செயல்படவல்ல திறன்மிகு படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகள் மூலம் பெறப்படும் நேரடிக் காணொளிகளையும் ஆளில்லா வானூர்திக் கண்காணிப்புக் காணொளிகளையும் சைபோர்க் ஒருங்கிணைக்கும். பின்னர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை அது செயல்முறைக்கு உள்ளாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…