உலகம்

இஸ்ரேலிய அணுசக்தி மையத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

தமது அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. 

அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக நிதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ள பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த ஏவுகணை, இஸ்ரேலிய அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் விழுந்து வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, தெற்கு இஸ்ரேலின் எராட் (Arad) நகர் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…