உலகம்

அணுசக்தி விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தமது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக வியூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

சந்திரனைச் சுற்றி வரும் விண்வெளி நிலையத் திட்டங்களைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக அடுத்த ஏழு ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிட்டு சந்திரனின் மேற்பரப்பில் ஒரு தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. 

அதேவேளை, செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியில் இயங்கும் விண்கலத்தை அனுப்பும் திட்டங்களையும் அது முன்னெடுத்துள்ளது. 

நாசாவின் நிர்வாகி ஜரெட் ஐசக்மேன், வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த மாற்றங்களை விளக்கினார். 

சந்திரனுக்கு அனுப்பப்படும் ரோபோடிக் பயணங்களை அதிகரிப்பதோடு, சந்திரனின் மேற்பரப்பில் அணுசக்திக்கான அடித்தளத்தை நிறுவனம் அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…