இந்தியா

கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் தடை

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 07 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 6.30 வரை கருத்து கணிப்புகளை நடத்துவதற்கு மற்றும் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பலரும் சமூக வலைதளங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நாளை (9) சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய திபதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…