உலகம்

“ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்கல்: வடக்கு இஸ்ரேலில் பதற்றம்”

இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று (09) அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள டெலிகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: “எமது நாட்டிற்கும் எமது மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய – அமெரிக்க ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரை இவ்வாறான பதிலடித் தாக்குதல்கள் தொடரும்.” 

இதேவேளை, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை வானிலேயே அழித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…