உலகம்

“ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்கல்: வடக்கு இஸ்ரேலில் பதற்றம்”

இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று (09) அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள டெலிகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: “எமது நாட்டிற்கும் எமது மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய – அமெரிக்க ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரை இவ்வாறான பதிலடித் தாக்குதல்கள் தொடரும்.” 

இதேவேளை, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை வானிலேயே அழித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…