உலகம்

ஈரானை இணைக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை – சர்வதேச பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் உள்ள போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவிப்பதற்கு முன், அமெிக்கா தெஹ்ரான் அரசின் மீது தனது பொருளாதார அழுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து வைத்திருக்க முயன்றுள்ளது.

வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில், அமெரிக்க நிதித்துறை அமைச்சகத்தின் Office of Foreign Assets Control (OFAC), ஈரான், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள 14 நபர்கள், நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

இவர்கள் ஈரான் அரசின் சார்பில் ஆயுதங்கள் அல்லது ஆயுத கூறுகளை வாங்குதல் மற்றும் போக்குவரத்துக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தடை நடைமுறையில், அந்த நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சொந்தமான அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும்.

மேலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 50% அல்லது அதற்கு மேல் உரிமையுள்ள தொடர்புடைய நிறுவனங்களும் இதன் கீழ் வரும் அவற்றையும் கட்டாயமாக அறிக்கை செய்ய வேண்டும்.

அமெரிக்க குடிமக்கள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள அல்லது அங்கு வழியாகச் செல்லும் வெளிநாட்டு நபர்களும் கூட, இந்தத் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடத் தடைசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அரசின் தகவலின்படி, இந்த நிறுவனங்கள், ஈரான் தனது ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனை மீண்டும் கட்டியெழுப்ப உதவியதாக கூறப்படுகிறது.

இந்த திறன், Operation Epic Fury எனப்படும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, “Operation Economic Fury” எனப்படும் விரிவான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

இதன் நோக்கம், ஈரானின் உலகளாவிய நிதி சந்தைகளுக்கான அணுகலை துண்டித்து, அமெரிக்கா ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்காக ஈரானை அழுத்தம் கொடுப்பதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…