உலகம்

ஈரான் மோதல் தாக்கம் தொடரும் ; உலக பொருளாதாரத்திற்கு IMF எச்சரிக்கை

ஈரான் மீதான மோதல் தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.

CNBC ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் இதனை தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, மசகு எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும், உரங்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனால் உணவுப் பொருட்களின் விலையும் 3 முதல் 6 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…