உலகம்

இனி படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்லத் தேவையில்லை: பிரம்மாண்ட திரைக்குள் உருவாகும் சினிமா உலகம்!

சினிமாப் படங்கள் எடுக்கும் முறையில் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்பு ஒரு பாலைவனத்தையோ அல்லது பனிப்பிரதேசத்தையோ காட்ட வேண்டும் என்றால், படக்குழுவினர் அந்த இடத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது ‘The Mandalorian’ போன்ற புகழ்பெற்ற தொடர்கள் ஒரு மூடிய அறைக்குள்ளேயே படமாக்கப்படுகின்றன.

திரைக்குள் ஒரு உலகம்: நடிகர்களைச் சுற்றி மிகப்பெரிய LED திரைகள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரைகளில் வீடியோ கேம்களில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தத்ரூபமான உலகங்கள் (பாலைவனம், விண்வெளி போன்றவை) உருவாக்கப்படுகின்றன. கேமரா நகரும்போது அந்தத் திரையில் உள்ள காட்சிகளும் அதற்கேற்ப நகர்வதால், பார்ப்பவர்களுக்கு அது உண்மையான இடம் போலவே தோன்றும். இந்தத் தொழில்நுட்பம் மிகவும் தத்ரூபமாக இருப்பதால், படப்பிடிப்பில் இருந்த சில ஊழியர்களுக்கு கடல் அலைகளைத் திரையில் பார்த்தபோது உண்மையிலேயே கடலில் இருப்பது போன்ற மயக்கம் (Seasickness) ஏற்பட்டதாம்! இதன் மூலம் படப்பிடிப்பு செலவுகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…