No products in the cart.
எரிசக்தி சந்தை பாரிய நெருக்கடியில் ; சவூதி அராம்கோ எச்சரிக்கை
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், சுமார் ஒரு பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உலகச் சந்தைக்கு வழங்கும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, எரிசக்தி சந்தை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (10) விசேட அறிவிப்பொன்றை விடுத்த அமீன் நாசர், எண்ணெய் விநியோகப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சந்தை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு கணிசமான காலம் எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.















