கனடா

கனடா அரசுக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என கனடா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

கனடாவின் ஒன்ராறியோ, வின்ட்சர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஹசன் ஹைதர் என்ற ஐந்து குழந்தைகளின் தந்தை, கடந்த ஏப்ரல் 10 அன்று லெபனானின் கானா கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு கனடா அரசு இஸ்ரேலிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தது. ஒரு கனடா பிரஜையின் மரணத்திற்கு வழிவகுத்த அனைத்துத் தகவல்களையும் நாங்கள் கோரி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என வெளிவிவகார அமைச்சுர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…