கனடா

கனடாவில் வீட்டு உரிமையாளர் ஓருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

 கிழக்கு டொராண்டோவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் உரிமையாளர், தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியதால், அவருக்கு சிறைத்தண்டனையும் பெரும் தொகையை அபராதமாகவும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈஸ்ட் யார்க் பகுதியில் உள்ள ‘608 டாஸ் ரோடு’ என்ற கட்டிடத்தின் உரிமையாளரான கரோலின் கிரெப்ஸ், தீ பாதுகாப்பு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, கரோலின் கிரெப்ஸுக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 120,000 டொலர் அபராதமாகவும், அதனுடன் கூடுதலாக 25 சதவீத கட்டாயப் பாதிக்கப்பட்டோர் அபராத கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…