சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து நேர்ந்த பேரிழப்புகளையும் துயரங்களையும் தாங்கிக்கொண்டு, தங்களைப் போன்ற பிற குடும்பங்களுக்கு அந்த நிலை வரக்கூடாது என்பதற்காக ஒன்ராறியோவைச் சேர்ந்த வயோதிப தம்பதியினர் செய்துள்ள பல மில்லியன் டாலர் நன்கொடை நெஞ்சை நெகிழவைத்துள்ளது.
கனடாவின் ஒக்வில் பகுதியைச் சேர்ந்த பிராங்க் மற்றும் ஜெனிஸ் லோக்லான் ஆகிய தம்பதியினரே இந்த உன்னத செயலைச் செய்து உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.
ஜெனிஸின் தாயார், பாட்டி என அவரது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகப் பலரும் ‘ஹண்டிங்டன்’ எனப்படும் மூளை நரம்பியல் பாதிப்பால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் மூளையின் நரம்புச் செல்களைப் படிப்படியாகச் சிதைத்து, கடுமையான உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
அதேபோல், பிராங்க்கின் முதல் மனைவியும் ‘ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா’ என்ற மூளை பாதிப்பால் குணாதிசயங்கள் மாறி, கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
