கனடாவில் ‘புரஜெக்ட் பே’ என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அமெரிக்க எல்லையிலிருந்து கனடாவிற்குள் சரக்கு லொரிகள் மூலமாக கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஆபத்தான போதை மருந்துகள் கடத்தப்படுவதாகக் கனடா பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
