கனடா

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்சிச் சூட்டு சம்பவத்தில் சிறுவன் காயம்

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு யார்க் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த சிறுவன், தானாகவே மருத்துவமனைக்குச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 15 வயது சிறுவன் ஒருவன், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நிலையில் தானாகவே மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த துரித புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…