கனடா நகரங்களில் அதிகரிக்கும் மனிதக் கடத்தல் ஆபத்து ; பெற்றோருக்கு எச்சரிக்கை

 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகெங்கிலும் இருந்து வரும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை வரவேற்பதற்கு கனடாவின் டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்கள் தயாராகி வருகின்றன.

இருப்பினும், இந்த சர்வதேச கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

டொராண்டோ சிறுவர் உதவி சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிசா டாம்லின்சன் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், உலகக் கோப்பை போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகள் மனிதக் கடத்தல்காரர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதாகத் தெரிவித்தார்.

Exit mobile version