கனடா

கனடாவில் பெருந்தொகை போதைப் பொருட்கள் மீட்பு

கனடாவின் லாயிட்மின்ஸ்டர் பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மீது காவல்துறையினர் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 4-ஆம் திகதி, லாயிட்மின்ஸ்டரின் 50-ஆவது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சுமார் 70,000 டொலர் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

600 கிராம் ஃபெண்டானில் போதைப்பொருள், ரொக்கப் பணம், போலி துப்பாக்கிகள் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

எல்லை நகரமான லாயிட்மின்ஸ்டரில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஃபெண்டானில் போதைப்பொருட்களிலேயே இது மிக முக்கியமான பெரிய அளவிலான பறிமுதல்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக 47 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த நபர், வரும் ஜூன் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…