கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், காவல்துறையினரின் வன்முறை, முறையற்ற நடத்தை அல்லது அலட்சியத்தால் பாதிக்கப்படும் பழங்குடியின மக்களுக்கு சட்டரீதியான உதவிகளை வழங்குவதற்காக காவல்துறை பொறுப்புக்கூறல் பிரிவு என்ற புதிய அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா பழங்குடியின நீதிக்கவுன்சில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் தங்களுக்கு நேரும் அநீதிகளுக்கு எதிராகப் புகார் அளிக்கப் பயப்படும் சூழலை மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
