விளையாட்டு

துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

ஆட்டம் தொடங்கிய உடனேயே பராகுவே அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக, 2-வது நிமிடத்தில் மத்தியாஸ் கலார்சா கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார். 

இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டின. அப்போது, முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மிகுவெல் அல்மிரோனுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய பராகுவே அணி, முதல் பாதி முடிவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

இரண்டாவது பாதியில் சமநிலை கோலை அடித்து போட்டிக்குள் மீண்டும் வர துருக்கி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆனால் பராகுவே அணியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 

இதனால் ஆட்ட நேர முடிவில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி உலகக் கிண்ண தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

10 வீரர்களுடன் விளையாடிய போதிலும், முன்னிலை கோலை கடைசி வரை தக்கவைத்த பராகுவே அணி 3 புள்ளிகளை கைப்பற்றியது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…