No products in the cart.
கனடா யார்க்வில் பகுதியில் துப்பாக்கிச் சூடு: இரு வர்த்தகக் கட்டடங்கள் சேதம்
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள யார்க்வில் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு வர்த்தகக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
அவென்யூ மற்றும் டேவன்போர்ட் வீதிச் சந்திப்புகளுக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததுடன், அருகிலிருந்த இரண்டு வணிகக் கட்டடங்கள் துப்பாக்கிச் சூட்டினால் சேதமடைந்திருப்பதையும் உறுதிப்படுத்தினர்.















