No products in the cart.
கனடா ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் அவசரப் பிரிவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை மதியம் 3:20 மணியளவில் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஹைவே 401 பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதற்கு அருகாமையில் உள்ள விக்டோரியா பார்க் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் மற்றொரு நபர் காயங்களுடன் கண்டறியப்பட்டார்.















