No products in the cart.
கனடாவில் குழந்தையுடன் காரைத் திருடிய நபர் கைது!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரில், நான்கு வயதுக் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த சொகுசு காரை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அந்த குழந்தை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாலை, குவெல்ஃப் நகரின் ‘வில்லோ ரோடு மற்றும் வெஸ்ட்வுட் ரோடு’ சந்திப்பில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே இந்த சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்தது.
காரின் பின் இருக்கையில் நான்கு வயதுக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. மாலை 4:20 மணியளவில் காரை காணாததை உணர்ந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-க்கு அழைத்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.















