No products in the cart.
ஹோர்முஸ் நீரிணை பதற்றம் ; அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் அங்கீகரிக்காத கடல் வழித்தடத்தில் வணிகக் கப்பல்கள் பயணித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் நிலவிய இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.















