உலகம்

கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம்

தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். 

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…