No products in the cart.
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு மனித கடத்தல்: சிக்கிய மெக்சிக்கோ பிரஜைகள்
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக மக்களை அழைத்து வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த மெக்சிகோவைச் சேர்ந்த மூவர் தங்களது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான நபர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவச் செய்த சர்வதேசக் கும்பலில் இந்த மூவருக்கும் தொடர்பிருப்பது அமெரிக்க நீதித் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நபர்களைக் கடத்துவதற்கான சதித்திட்டம் தீட்டியது மற்றும் நிதி ஆதாயத்திற்காக நபர்களைக் கடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை இவர்கள் மூவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.















