உலகம்

ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் (27) ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்தவொரு மோதல்களும் இடம்பெறவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஈரானும் தற்போது தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…