இந்தியா

தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. 

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (5) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்களைச் சேர்க்கும் அடிப்படையிலான திட்டங்கள் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அதீத இலாபத்தை வழங்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், இது தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் குறித்த முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைப் பொதுமக்கள் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம் – மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை

வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.…