ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பகிரங்கப்படுத்தினார். 

இந்தக் கடிதத்தின் மூலம் குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இந்தக் கடிதத்தைக் தேடிக் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் இருந்தது. 

எப்படியோ இந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தது. நாடு எங்கு செல்கிறது என்பதை அவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள். 

தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது முறையே 63 மற்றும் 65 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த வயது எல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதே எமது நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version