No products in the cart.
கனடாவில், சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு தண்டனை அறிவிப்பு!
கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம், கிரிஸ்டலுக்குச் சொந்தமான இரண்டு ‘கேன் கோர்சோ’ ரக நாய்கள் தாக்கியதில் கேச் கிரிஸ்ட் என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவத்தில் ‘மரணத்தை விளைவித்த குற்றவியல் அலட்சியம்’ இழைத்ததாகக் கூறி, கடந்த மே மாதம் கிரிஸ்டலை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.















