மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று காலை (15) ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன. 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர். 

Exit mobile version