அத்தனகலு ஓயா, களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வௌ்ளப்பெருக்கு 

இன்றைய தினமும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யுமானால், அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். தற்போது அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் மில்லகந்த மற்றும் எலகாவ ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version