இலங்கை

தங்கமுலாம் துப்பாக்கி துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இன்று 24 ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…