சினிமா

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்?

தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான்.

இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசியில் நிகழ்ச்சியில் சமைத்து டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார். தற்போது பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி கொஞ்ச நாட்கள் தன்னுடைய கணவரைப் பற்றியே பேசி வந்த பிரியங்கா திடீரென்று தன் கணவரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். அதற்குப் பின் பிரியங்காவிற்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபட்டு பிரிந்து விட்டார்கள் என்று தெரிந்தது.

சமீபத்தில் பிரியங்கா வெளிநாட்டில் ரகசியமாக வசி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பிரியங்காவின் கணவர் வசி டிஜேவாக பணியாற்றி வருகிறார்.

இவர் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பப்புகளில் டிஜேவாக பணியாற்றி இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்காவும் வசியும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். அதற்கு பின் இவர்களுக்கிடையில் காதல் மறந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இருவருமே காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு பிரியங்கா தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஹனிமூனுக்கு லண்டன் சென்று விட்டார். இதற்கு இடையில் பிரியங்காவின் திருமணம் குறித்து பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, திருமணத்திற்கு பிறகு பிரியங்கா விஜய் டிவியை விட்டு விலகி விட்டார். வசியை திருமணம் செய்வதற்க்கு முன்பு பிரியங்கா கர்ப்பமாகிவிட்டார். அதனால் தான் இவர்கள் இருவருமே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வளம் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொகுப்பாளினி பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்க வாய், உங்க உருட்டு என்று கேப்சன் அடங்கிய ஒரு டீசர்ட்டை அணிந்து கொண்டு பிரியங்கா குபீர் என்று சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் தன்னை பற்றிய வதந்திகள் எல்லாமே பொய். அதைப் பார்த்து பிரியங்கா சிரிப்பு போல இருக்கிறது.

What's your reaction?

Related Posts

விஷால் உடன் திருமணம்! திகதியை அறிவித்தார் சாய் தன்ஷிகா!

தமிழ் திரையுலகில் 2004ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” படத்தின் மூலம் விஷால் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து “சண்டகோழி”, “திமிரு”, “தாமிரபரணி” என பல படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகராக…