கனடா

தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய விசமிகள்

கனடா பிரம்டன் நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றியோ மாகாணத்தின் பிரம்டன் நகரில் உள்ள பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் இந்த மாதம் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது.

இந்த நினைவகம் செவ்வாய்க்கிழமை நேற்று 27 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமது முகங்களை மூடிய நிலையில் இனந்தெரியாத நபர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் குறித்து பிராந்திய காவல்துறையில் முறையிடப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் இனம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்திய சம்பவம் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது

What's your reaction?

Related Posts

கனடா பலமானதும் சுதந்திரமானதுமாக இருக்க வேண்டும் – மன்னர் சார்ள்ஸ்

கனடா பலமானதும் சுதந்திரமானதுமாக இருக்க வேண்டுமென மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றில்அக்கிராசன உரை நிகழ்த்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மன்னார் சார்ள்ஸின் இந்த கருத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நேரடி…