சினிமா

இன்ப அதிர்ச்சியில் நடுவர்கள்

ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

சீரியல்களும் மக்களிடம் பிக்கப் ஆனாலும் ரியாலிட்டி ஷோக்களுக்கான மவுசு அதிகமாக உள்ளது. இதனால் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்ள திறமையுள்ள கலைஞர்கள் அதிகம் போட்டி போடுகிறார்கள்.

திறமையை காட்ட நினைப்பவர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது சூப்பர் சிங்கர், சரிகமப, டான்ஸ் ஷோ டான்ஸ், ஜோடி ஆர் யூ ரெடி ஷோக்கள்.

அப்படி மக்களால் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் சரிகமப, தற்போது இதன் 5 ஆவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இதன் ஆடிஷனில் நடிகை தேவயானியின் மகளான இனியாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

இனியா ஆடிஷனில், மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி இருக்கிறார். அவர் பாடியதை கேட்டு செலக்ட் செய்தனர், பின் தேவயானியை பார்த்து முதலில் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.

பிறகு நடுவர்கள் தேவயானியிடம் இந்த மேடை தேர்வு செய்தது ஏன் என கேட்க, அதற்கு அவர், இந்த மேடை எல்லாருக்கும் ஈஸியா கிடைக்காது என்னோட மகள் அவளுடைய சொந்த முயற்சியால் மேலே வரணும் என்பது தான் என்னுடைய ஆசை.

அதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…