No products in the cart.
இந்திய – பாகிஸ்தான் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவில் நடந்த முக்கிய கூட்டம்!
பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்ட, அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்றக் குழு வாஷிங்டனில் தொடர்ச்சியான உயர்மட்டக் கூட்டங்களை நடாத்தியுள்ளது.
அமெரிக்கா சென்றடைந்த இந்தியத் தூதர், தனது உத்தியோகபூர்வ பணிகளைத் தொடங்கி, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர் உறுப்பினர்களைச் சந்தித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், காங்கிரஸ் கட்சிக்காரரான சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைமையுடன் கலந்துரையாடியது
இதன் பின்னர், இந்திய வெளியுறவுக் குழுவின் குடியரசுக் கட்சித் தலைவர் பிரையன் மாஸ்ட் மற்றும் ஜனநாயக தரவரிசை உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் ஆகியோரைச் சந்தித்தது.
ஜனநாய0TXYB9க தரவரிசை உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் கூறுகையில், சசி தரூர் மற்றும் வெளியுறவுக்கான இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களை உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காமில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க பிரதிநிதிகள், அமெரிக்கா – இந்தியா கூட்டாண்மைக்கான காங்கிரஸின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியக் குழு, அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.