இலங்கை

போதைப்பொருட்களுடன் 344 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 109 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 117 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 116 பேரும், மாவா போதைப்பொருளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 157  கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 199 கிராம் 338 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 03 கிலோ 912 கிராம் 540 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 25 கிராம் 70 மில்லிகிராம் மாவா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…