இலங்கை

சர்வஜன அதிகாரத்திலிருந்து ஒருவர் இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்டதற்காக சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வஜன அதிகாரத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமற்ற ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…