விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சின்னர்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 6 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரசை சந்திக்கிறார்.

What's your reaction?

Related Posts

பயிற்சியாளர் ஆகிறார் சுரேஷ் ரெய்னா?

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20…